Tuesday, April 26, 2011

கோத்தாபய ராஜபக்ஷ அமெரிக்காவில் கைது செய்யப்படும் நிலையை எதிர்கொண்டுள்ளார்?

பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ அமெரிக்காவில் வைத்துக் கைது செய்யப்படும் நிலையை எதிர்கொண்டுள்ளதாக நம்பகமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த சனிக்கிழமை மிகவும் இரகசியமான முறையில் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ திடீர் விஜயமொன்றை மேற்கொண்டு அமெரிக்காவுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். தற்போது அவர் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தங்கியிருப்பதாக தனிப்பட்ட தகவல் வட்டாரங்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
அமெரிக்காவில் தங்கியிருக்கும் காலத்தில் ஐ.நா.நிபுணர் குழு அறிக்கை குறித்து அவர் முக்கியமான அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. அதற்கான முயற்சிகளில் அவர் ஈடுபட்டிருப்பதை இலங்கைத் தூதரக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அத்துடன் அவரது புதல்வனின் திருமண விடயங்களைக் கவனிக்கும் நோக்கிலேயே அவர் அமெரிக்காவுக்கு வருகை தந்துள்ளதாகவும், அதற்கு மேலதிகமாகவே உத்தியோகபூர்வ சந்திப்புகளை மேற்கொள்ள முயற்சிகளை முன்னெடுத்துள்ளதாகவும் தூதரக அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு அறிக்கையின் மூலம் போர்க்குற்றங்களை இழைத்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவை அமெரிக்காவில் வைத்துக் கைது செய்யும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதாகவும் நம்பகமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க குடியுரிமை பெற்றவர் என்ற ரீதியில் அவரை விசாரிப்பதற்கான உரிமை அமெரிக்க நீதித்துறைக்கு உண்டு என்றும் அந்த வட்டாரங்கள் மேலும் குறிப்பிட்டுள்ளன.

Monday, February 21, 2011

பார்வதி அம்மாள் அஞ்சலி தினத்தில் கறை பூசிய உதயன்-தமிழுக்கும் கறை பூசும்

பார்வதி அம்மாள் அஞ்சலி தினத்தில் கறை பூசிய உதயன். 
 




உலகத் தமிழினத்திற்கு முகவரி தந்த வீரத் தலைவனை ஈன்றெடுத்த தேசத் தாய் வேலுப்பிள்ளை பார்வதி அம்மாள் அவர்களின் பிரிவு தமிழ் மக்களின் மனதில் ஆறாத துயரத்தினைத் தந்திருக்க யாழ்ப்பாணத்தில் இராணுவ உயர் அதிகாரிகளை அழைத்து தமிழ் தேசிய ஊடகம் ஆண்டு நிறைவினை கொண்டாடி பூரித்திருக்கின்ற அவலமும் நிகழ்ந்தேறியிருக்கின்றது. உதயன் பத்திரிகை தனது 25ஆவது அகவையை எட்டி நிற்கும் பொழுது அது அடைகின்ற ஆனந்தத்திலும் அதனை சார்ந்து நிற்கின்ற வாசகர்கள் அடைந்து நிற்கின்ற பூரிப்பானது எல்லையற்றது. எத்தனை நெருக்கடிகள் வந்தாலும் உதயன் சோர்ந்து விடவில்லை என்று சொல்லுவார்கள்.

உயிர்கள் பிய்த்தெறியப்பட்ட போதிலும், அலுவலக சொத்துகள் அழிக்கப்பட்ட போதிலும் சோர்ந்து போகாத உதயன் தன் நேர்த்தியான போக்கில் இருந்து தொய்ந்து போகவில்லை என்பார்கள்.
உதயனின் ஒவ்வொரு ஆண்டுப் பூர்த்தியின் போதும் உதயனுக்காக உயிர் கொடுத்த ஊழியர்களின் புகைப்படங்கள் தாங்கிய பதிப்புக்களை உதயன் வெளியிடவும் பின்நிற்கவில்லை.
வெள்ளிவிழாக் கண்டு நிற்கின்ற உதயன் தனது வெள்ளிவிழா நிகழ்வின் போது, கொல்லப்பட்ட ஊடகவியலாளருக்கு முதலில் வணக்கம் செலுத்தியமை சிறப்பு.

ஆனால் கொல்லப்பட்ட ஊடகர்களுக்கான முதல் மாலையினை இராணுவ அதிகாரி கேணல் பெரேரா அணிவித்த போது அடுத்த மாலைகளை அணிவிக்கக் காத்திருந்த உயிரிழந்த ஊடகர்களின் பெற்றோரும் உறவினர்களும் குமுறிக்கொண்டதாக நிகழ்வில் பங்குகொண்டிருந்த உதயன் ஊழியர்கள் தெரிவித்தனர். இன்றைய நாள் வெள்ளிவிழாச் சிறப்புக்குரிய நாள் என்பது பெருமைக்குரிய விடயம் தான் ஆனால், தேசத் தலைவனைத் தந்த அன்னையின் பிரிவிற்காக இன்றைய நாளைத் தியாகம் செய்திருக்கக் கூடாதா? என்று உதயன் ஊழியர்களே நிகழ்வில் சென்றவர்களிடம் மனம் நொந்திருக்கிறார்கள்.

வல்வெட்டித்துறை அமெரிக்க மிசன் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை இன்று தனது பாடசாலையின் இல்ல மெய்வல்லுநர் போட்டியினை இடை நிறுத்தியிருக்கின்றது. குறித்த பாடசாலை நிர்வாகம் உடனடியாகவே இராணுவத்தினரின் நெருக்குதலுக்கு உட்பட்டிருக்கின்றது. அதனை விடவும் கல்விச் சமூகத்தின் உயர் மட்டத்திற்கான பதிலையும் அந்தப் பாடசாலை வழங்கவேண்டிய தேவை என்பது ஒருபுறம். அரசை சார்ந்து அல்லது அரசின் நிகழ்ச்சி நிரலுக்குள் செயற்படும் ஒரு பாடசாலையே தனது விளையாட்டுப் போட்டியினை இடை நிறுத்துகின்ற போது தமிழ் தேசியத்தினைச் சொல்லிச் சொல்லியே 25 ஆண்டுகளைக் கடந்து நிற்கும் உதயன் பத்திரிகையும், தமிழ் தேசியத்திற்காக குரல் கொடுக்கும் ஒரு பத்திரிகையின் ஸ்தாபகர் என்ற அடிப்படையில் தமிழ் மக்களால் தேர்வு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் அவர்களும் சரியான முடிவினை இன்றைய நாளில் எடுத்திருக்க வேண்டும்.

நிகழ்விற்கான கௌரவ விருந்தினர்களாக யாழ்.மாவட்ட இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் ஹத்துரசிங்கவும் யாழ்.மாவட்ட அரச அதிபர் இமெல்டா சுகுமாரும் குறிப்பிடப்பட்டு அழைப்பிதழ் வடிவமைக்கப்பட்டு உரியவர்களிடம் கையளிக்கப்பட்டமையை காரணமாகக் காட்டி நிகழ்வினை இடை நிறுத்த முடியாது என்று கூறலாம். அவ்வாறாயின் தேசியம் எனச் சொல்லிக் கொள்வது எதனை? தேசியத்திற்காக கொடுக்கப்பட்ட அதி உயர் விலைகளுக்கு ஈடாக கௌரவ விருந்தினர்கள் குறித்த நிறுவனத்தால் கருதப்படுகின்றார்களா? போன்ற கேள்விகளுக்கான பதில் தான் என்ன?. எந்த இராணுவத்தால் தலைவர் அவர்களின் தந்தையாரும், தாயாரும் நிரந்தர நோயாளிகளாக்கப்பட்டு உயிரிழப்பு வரையில் அவர்களைத் தள்ளும் நிலை ஏற்பட்டதோ அதே இராணுவத்தின் அதிகாரி ஒருவருக்கு சிறப்பு மரியாதை கொடுக்கப்பட்டு நிகழ்வு நடைபெற்றுள்ளது. அதேவேளை உடலத்தை பொறுப்பேற்கவோ அதனை பார்வையிடவோ முடியாத அளவிற்கு வல்வெட்டித்துறை வைத்தியசாலையினை முற்றுகையிட்டு இராணுவம் நிலை கொண்டிருக்கின்றது. வைத்தியசாலையின் ஒதுக்குப்புறமான அறை ஒன்றில் அனாதை போல வீரத் தலைவனின் தாயாரின் உடலம் வைக்கப்பட்டிருக்கின்ற அவலம் உதயன் பத்திரகை நிறுவனத்திற்கு தெரியாதா?

நன்றி: சரிதம்

Tuesday, December 28, 2010

வலிகாமம் வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் சுட்டுக்கொலை-உண்மை என்ன?

சிங்கள மொழியில் ஸ்ரீலங்கா தேசிய கீதம் இசைக்க எதிர்ப்பு தெரிவித்தவர் என்பதால் சுட்டு கொல்லப்பட்டார் இதுவே உண்மை கொள்ளை என்ற பெயரில் பலபேர் இப்படி பலி வாங்கப்படுகிறார்கள்  என்பது உண்மையே  கரிகாலனின் புலனாய்வு செய்தியாளர் 

லிகாமம் வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் நேற்று இரவு அவரது வீட்டில் வைத்து இனந்தெரியாத ஆயுததாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் உரும்பிராய் மேற்கு மூன்று கோவிலடியைச் சேர்ந்த மார்க்கண்டு சிவலிங்கம் வயது 52 என்பவரே சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது நேற்று மாலை வான் ஒன்றில் வந்த ஆயுததாரிகள் அவரினைச் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரியவருகிறது. எனினும் அவரது மகளின் நகைகளை அங்கு வந்தவர்கள் கேட்டதாகவும் மகள் கூக்குரலிட்டபோது அங்கு வந்த தந்தையை ஆயுததாரிகள் சுட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அண்மைக் காலமாக திருடர்கள் என்ற போர்வையில் ஆயுததாரிகள் அவ்வாறான சம்பவங்களில் ஈடுபட்டு தங்களின் முயற்சிகளை திசைதிருப்பும் புதிய உத்தியை கையாண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறான முயற்சியிலேயே அண்மையில் சங்கானையில் ஆலய குருக்களும் அவரது புதல்வர்களும் சுடப்பட்டதாக தெரியவருகிறது

Friday, November 26, 2010

மாவீரர்களது புணித ஆத்மாவை சாட்சியாக்கி சொல்கின்றோம் தலைவர் உள்ளிட்ட தளபதிகள் நலமாகவும் பாதுகாப்பாகவும் உள்ளனர்.

உலகத் தமிழினத்தின் தலைநிமிர்விற்கு இன்று அகவை 56. தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது 56வது பிறந்த நாள் அன்று களத்தில் இருந்து இனிப்பான நம்பிக்கையான தகவல் கிடைத்துள்ளது.

கடந்த ஆண்டு மே௧9ம் திகதிக்கு பின்னர் எல்லாமே முடிந்துவிட்டதாக எதிரிகள் கதையளக்க அதை நம்பி துரோகிகள் கூக்குரல் இட்டு ஆரவாரம் செய்ய ஒவ்வொரு நிமிடங்களும் உலகத் தமிழர்களிற்கு ஒவ்வொரு யுகங்களாக கடந்து வருகையில் அவ்வப்போது நம்பிக்கையான தகவல்கள் பலவழிகளில் கிடைத்த வண்ணமுள்ளது. அந்தவகையில் வன்னி களமுனையில் இருந்து நம்பிக்கையான தகவல் கிடைத்துள்ளது. அதனை இந்த தலைவனது பிறந்தநாளில் உலகத்தமிழர்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்வடைகிறோம்.

மாங்குளம் ஒட்டிசுட்டான் வீதியில் உழவுஇயந்திரத்தில் பயணித்துக் கொண்டிருந்த முன்னாள் போராளி ஒருவரை இடைமறித்த களத்தில் உயிர்ப்புடன் இருக்கும் போராளிகள் குழு ஒன்று இந்த நம்பிக்கையான தகவலை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

நாங்கள் அழிந்து போய்விடவில்லை. உயிருடன் பத்திரமாகத்தான் இருக்கின்றோம். உலக அரங்கில் நடைபெறும் நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்துகொண்டுதான் உள்ளோம். அடுத்கட்ட பாய்சலுக்கு வாய்ப்பான சூழலில் தலைவரிடம் இருந்து வரும் கட்டளைக்காக காத்திருக்கின்றோம். தயவுசெய்து புலம்பெயர்ந்து இருக்கும் எமது உறவுகளிடம் சொல்லுங்கள்...

எதிரியாலும் துரோகிகளாலும் வெளியிடப்படும் செய்திகளையும் தகவல்களையும் நம்பவேண்டாம். நாங்கள் பத்திரமாக உள்ளோம் என்றும் அண்ணை(தலைவர்)வெளியில் வந்து தமிழீழத்தை மீட்பது விரைவில் நடக்கத்தான் போகின்றது. அதற்கு ஒன்றுபட்ட மக்கள் சக்தியாக புலம்பெயர்வாழ் உறவுகள் களமாடவேண்டியது அவசியமாகும். என்ற தகவலை சொல்லிவிட்டு களநிலவரம் தொடர்பாக சில தகவல்களையும் பகிர்ந்து கொண்டுவிட்டு கடந்து சென்றுள்ளனர் இன்னும் உயிர்ப்புடன் களப்பணியில் தம்மை அர்பணித்துக் கொண்டிருக்கும் தேசத்தின் புயல்கள்.

அன்புத் தமிழ் உறவுகளே! தமிழீழம் என்பது குறிப்பிட்ட சிலரது விருப்பமோ ஆசையோ எதிர்பார்ப்போ அல்ல. ஒட்டுமொத்த உலகத் தமிழர்களுக்கும் வேண்டிய அவசியமான நிலையாகும். ஆகவே குறிப்பிட்ட சிலரோ அல்லது குறிப்பிட்ட சில குழுவினரோ ஒட்டுமொத்த சுமையையும் தாங்கிக் கொண்டு தமிழீழ விடுதலைக்கான பணியை தொடர்ந்து செய்ய முடியாது. நாம் எல்லோரும் ஒன்றுபட்டுத்தான் அன்நிய ஆக்கிரமிப்பிற்குள்ளாகியிருக்கும் எமது தாபயகத்தை மீட்டெடுக்க வேண்டும்.

தலைவரது இருப்புத் தொடர்பாகவும் களமுணையில் மீண்டும் ஒரு போராட்டம் சாத்தியமா...? என்ற விவாதங்களில் இனியும் காலத்தை விரையமாக்காது விரைந்து பணியாற்றுவோம். அனைத்துலக மன்றங்களில் எமது கோரிக்கையை வலுவாக முன்வைத்து தலைவரது வரவிற்கும் அத்தோடு இணைந்த தமிழீழ மலர்விற்கும் விரைந்து வழியேற்படுத்துவோம்.

தமிழீழ விடுதலையை தமது உயிர் மூச்சாக வரித்துக் கொண்டு கடலிலும் தரையிலும் வானிலும் கரைந்து போய் காவியமான எமது மானமறவர்களான மாவீரர்களை போற்றிபுகழ்ந்து நிணைவெழுச்சி கொள்ளும் இந்த புணிதநாட்களில் அந்த மாவீரர்களது புணித ஆத்மாவை சாட்சியாக்கி சொல்கின்றோம் தலைவர் உள்ளிட்ட தளபதிகள் நலமாகவும் பாதுகாப்பாகவும் உள்ளனர்.

முள்ளிவாய்க்காலில் எமது பாசத்திற்குரிய பல்லாயிரக்கணக்கான உறவுகளை கொன்று குவித்ததோடு விழுப்புண்னடைந்து களத்தில் இருந்த பல்லாயிரம் போராளிகளையும் அனைத்துலக போர்விதிகளை மீறி கொன்று குவித்து கொலைவெறியாட்டம் நிகழ்த்திய சிங்களத்திற்கும் அதற்கு துணைநின்ற நாடுகளிற்கும் தமது பிராந்திய நலன்களை நிலைநிறுத்திக் கொள்வதற்காக நிகழ்ந்தேறிய கொடுமைகளை வெறும் பார்வையாளர்களாக இருந்து பார்தத உலக வல்லரசுகளிற்கும் அதிர்ச்சியினை ஏற்படுத்தி சுதந்திர தமிழீழத்தை தலைவர் அமைப்பது சர்வ நிட்சயம்.

அதற்கு நாம் என்ன செய்யவேண்டும்...? உலகத் தமிழர்களே சிந்தியுங்கள். துணிவுடன் முடிவெடுங்கள். இறுதி இலக்கான தமிழீழத்தை வென்றெடுக்கும்வரை ஓயமாட்டோம் என்று தமிழீழக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தணப்பேழைகளாகிய முப்பத்தேழாயிரத்திற்கு மேற்பட்ட மாவீரர்களது கல்லறைமீது வீர சபதமெடுத்து களமாட இன்றே புறப்படுங்கள்.

நாளை நமதே. நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

விடுதலைதேடி முதலடிவைத்து முன்நின்ற தலைவனே நீ வாழ்க. - யேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கம்.

வானமே,வையகமே,தமிழீழத் தாயகமே,இன்று நீ மடிசுமந்து பெற்ற உன் தவப் புதல்வனின் பிறந்தநாள். பெற்றதாய் குழந்தையைப் பேணுவதுபோல் உனைப் பேணிக்காத்த வேங்கைகள் தலைவனின் பிறந்தநாள்.

ஆண்டாண்டு காலமாக அடிமைகளாக்கப்பட்டு,அடக்கியொடுக்கப்பட்ட இனத்தின் தீராத தலைவிதியை மாற்றியமைக்க முதலடிவைத்து முன்நின்ற எங்கள் தேசியத் தலைவனே நீ வாழ்க. கத்தியின் முனையாலும்,புத்தியின் துணையாலும்,மண்ணின் பாரத்தை மனதில் சுமந்து,முன்நின்று முகம்காட்டிய மூதறிஞனே நீ வாழ்க.

பால் புளித்தாலும்,ஞாயிறு இருண்டாலும்,மறைநெறி திரிவுற்றாலும்,உலகமே நிலை பிறழ்ந்தாலும்,தன் சொல் பிறழாது,கடமையினின்று சற்றும் தவறாத வீரத் தமிழனே நீ வாழ்க.

உன்நெஞ்சில் வஞ்சமில்லை,உன் நேசத்தில் பஞ்சமில்லை,நீ செய்திட்ட பணியெல்லாம் செந்தமிழர் வாழ்வதற்கே. உனை ஊர் கூடித்தேரிழுக்கும்,உலக தெய்வங்கள் உன் வாசல் தேடிவந்து வாழ்த்துரைக்கும்.

எங்கள் துன்பக்கடலை கடக்கவல்ல தோணியே,இனவெறிகொண்ட சிங்களத்தை எதிர்த்து நின்ற பேராயுதமே,தாயின் மணிவயிற்றில் கருவாக இருக்கும்போது,எல்லாளன் கதையைக்கேட்டு,அவன்போல் தமிழ் வீரனாகியவன் நீ. பசியெனத்தோன்றுவோர் பகைவர்களாயினும் புசியெனச்சொன்ன ஈழத்தாயின் இணையற்ற வீரனே,ஓர் கண்ணியமான இனத்தின் காவலனே நீ வாழ்க.

புத்தனின் அமைதியும்,போதிமரத்தின் புனிதமும் ஈழத்தமிழனின் குருதியில் சிதறியபோது,தமிழர்கள் அடங்கியொடுங்கும் ஆட்டுமந்தைகள் அல்ல,ஆண்ட பரம்பரையின் அக்கினிக் குஞ்சுகள் என்றுகாட்ட,தமிழீழ மீட்புப்பணியெனும் இலட்சியத் தீக்குள் நின்று சமராடிய வீரப்புதல்வனே நீ வாழ்க.

என்குடும்பம்,என்சாதி,என்சுற்றம்,என்மதம் என்ற வட்டத்திலிருந்து வெளிவந்து, இரத்த உறவைவிட இலட்சிய உறவே உயர்ந்தது என்று அனைவர்க்கும் பாடம் புகட்டிய எங்கள் தலைவனே, நெருப்பும் உன் நேர்மையைப் புகழும். நீ ஏந்திய விளக்கில் எண்ணையாய் எரிபவனே, நீ மனிதம் சிதைக்கப்பட்ட ஈழத்தமிழ் மக்களின் உரிமைக்காக உனை அர்ப்பணித்த சமூகமாற்றச் சக்தி.

உலகிலுள்ள எந்தப் பலமான அரசும் தோற்கடிக்கப்படலாம்,அல்லது அழிக்கப்படலாம். இது அந்தநாட்டை,எத்தனைநாடுகள்,எவ்வளவு காலமாக, என்னென்ன வழிகளில் சுற்றிவளைக்கின்றன என்பதைப்பொறுத்ததே.

காலில் ஈரம் படாமல் கடலைக்கடக்கலாம், ஆனால் கண்ணில் ஈரம்படாமல் சுதந்திரம் அடையமுடியாது.  நதிகள் ஒன்றாகச்சேர்ந்து பேராறாகும்போது வலிமைபெறுகின்றுது, அது இயற்கை தந்த பாடம். அடம்பன் கொடியும் திரண்டால் முடுக்கு, இது மூதாதையரின் வாக்கு.

கார்மேகம் கதிரவனை மறைப்பதுபோல் இன்று நீ மறைந்து நின்றாலும், நாளை நீ தோன்றுகையில் ஈழத்தின் இருள்நீங்கி விடியல்பிறக்கும். எங்கள் சுதந்திரம் பூமியில் சுடர்விடும். விடிவெள்ளி பூக்கும், வீதியிருள் நீங்கும். தமிழர் வாழ்விலே புதுப்புனலாக, பொன்னருவியாக, தேன்தென்றலாக, தெம்மாங்கு பாடலாக தமிழீழம் எமைத் தாலாட்டும். அந்தநாள் வெகு தொலைவிலில்லை.

எங்கள் தலைவனே என்றும் நீ வாழ்க, சுதந்திரத் தமிழீழம் பெற்று வாழ்க.  
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

யேர்மன் திருமலைச்செல்வன்.
யேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கம்.

Tuesday, November 16, 2010

Monday, November 8, 2010

கிளிநொச்சி மண்ணிலிருந்து உலகத்தமிழர்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் விடுக்கும் முக்கிய அறிவித்தல்





தமிழீழ விடுதலைப் புலிகள்-கிளிநொச்சி
உருத்திரபுரம்
கிளிநொச்சி
தமிழீழம்


கிளிநொச்சி மண்ணிலிருந்து உலகத்தமிழர்களுக்கு விடுக்கும் முக்கிய அறிவித்தல் இந்த வருடம் மாவீரர் நாளை இடம்பெயர்ந்து மீள்குடியேற்றப்பட்ட மக்கள் அனைவரும் உங்கள் வீடுகளில் நினைவுகூருமாறு அன்புடன் கேட்டுகொள்கின்றோம். நாங்கள் கிளிநொச்சி மண்ணில் பாதுகாப்பான இடத்தில் எங்கள் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தவுள்ளோம்.
மாவீரர் நாளை முன்னிட்டு புலத்தில் ஒலித்துகொண்டிருக்கும் புலிகளின்குரல் வானொலி சிறப்பு நிகழ்சிகளை வழங்கவுள்ளது. புலிகளின் குரல் வானொலியூடாக எமது தலைமை செயலகத்தில் இருந்து மாவீரர் நாள் உரை ஒலிபரப்பப்படும்.
இலங்கை அரசாங்கத்தாலும் தமிழ் கைக்கூலிகளாலும் மாவீர்நாளை முன்னிட்டு பொய்யான உரைகள் வரும் அதை நம்பவேண்டாம் என புலம்பெயர்ந்த மக்களுக்கு அறிவிக்கின்றோம். புலம்பெயர்ந்து வாழும் அனைத்து தமிழ் மக்களும் மாவீரர் நாளை நினைவுகூருமாறு கேட்டுகொள்கின்றோம் "புலிகளின் தாகம் தமிழீத் தாயகம்"